வெள்ளி வசந்தம்

ஆலிம் பெருமக்கள் அள்ளித் தரும் ஆழிய கருத்துகளை ஆசிரியர்கள் தொகுத்து .வழங்கும் ஜும்ஆஉரைகள்

சட்டங்கள்

வணக்கம்,வழக்கம்,வணிகம்,இல்லறம்,நல்லறம்,தொடர்பான வினாக்களுக்கு ஆதாரத்துடன் அளிக்கப்பட அருமையானபதில்கள்

குழந்தைப் பெயர்கள்

அரபு மற்றும் அர்த்தத்துடன் முஸ்லிம் குழந்தைகளுக்கான அழகுத் திருப் பெயர்கள்

அரபுக் கல்லூரிகள்

தரணி எங்கும் தலைசிறந்து விளங்கும் அரபுக் கல்லூரிகள்

வலைதள வல்லுநர்கள்

இந்த தளத்தில் அரும்பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்

12 November 2014

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு الحدود رحمة من الله تعالى للأمة قطع اليد وقاية لأموال الناس

ன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உலகில் பல்வேறு குழப்பங்கள் பல்கி பெருகி கொண்றிருக்கின்றன அவைகளில் ஒன்றுதான் திருட்டு இது இன்று கொள்ளை வழிப்பறி ஏமாற்றுதல் போன்ற பல பரிமாணங்களில் உண்டாகி இருக்கின்றன .
இவைகளினால் பல பேருக்கு நஷ்டம் மன கஷ்டம் பேரிழப்பு சில நேரம் உயிரிழப்புகூட உண்டாகின்றது .

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர்.  பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.
ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் அணிவகுப்பு நடந்தது. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் புடைசூழ பவணி வந்தார்கள். வழியில் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்க வேண்டியிருந்தது. அதில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓடை ஒன்றும் இருந்தது.
அப்போது ஓர் எறும்பு பேசியதை நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்டு முறுவலித்தார்கள். இதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும்.
அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே (வாதிந் நம்ல்) வந்தபோது ஓர் எறும்பு, “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் (மஸாகின்) நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் உங்களை மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:18,19)
இங்கு ‘எறும்பு ஓடை’ என்பதைக் குறிக்க ‘வாதிந் நம்ல்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது.
  • நம்லத்-எறும்பு;
  • நம்ல்-எறும்புகள்.
  • ‘வாதீ’ என்பதற்கு பள்ளத்தாக்கு (Conyon), கணவாய் (Ravine), மலை இடுக்கு (Gully), இடுக்கு வழி (Gorge), ஓடை (Rivulet)
ஆகிய பொருள்கள் உள்ளன.
இந்தச் சொல்லாக்கத்தைப் பார்த்து கீழை அறிஞர்கள் சிலர் நகைத்ததுண்டு. ஏனெனில், புற்றுகளில் எறும்பு இருக்கும்; மண் தரையில் வழியமைத்து சிறிய அளவில் வீடுகளை அமைத்து வாழும். எறும்புகளுக்குப் பெரிய அளவில் ஓடையோ சுரங்கமோ எங்கே உள்ளது என்று அவர்கள் குர்ஆன்மீது வினா தொடுத்தார்கள்; அதன் நேர்மையில் கல் எறிந்தார்கள்.
இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம்மில் சிலரும் ‘வாதிந் நம்ல்’ என்பதற்கு ‘எறும்புப் புற்று’ என்றே பொருள் செய்துவருகிறோம். உண்மையில் புற்றைக் குறிக்க இவ்வசனத்தில் வேறொரு சொல் (மஸாகின் – குடியிருப்புகள்) ஆளப்பெற்றிருப்பது கவனத்திற்குரியது.
ஆக, எறும்புக்கு ஓடையோ சுரங்கமோ இல்லை என்றே உலகம் கருதிவந்த நிலையில் அண்மையில் அப்படி ஒன்று உண்டு என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுதான் வியப்பு.
பிரேசிலில் அகழ்வாராய்ச்சி
பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியில் எறும்புகளின் ஒரு 1நகரமே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன. சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது. பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன.  Refer MailOnline
இந்த எறும்பு நகரத்தில், பொதுச்சாலைகள், கிளை நடைபாதைகள், பூங்காக்கள் உள்பட ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா கட்டமைப்புகளும் உள்ளன. இதுதான் உலகிலேயே எறும்புகளின் பெரும்கூட்டம் வசிக்கும் இடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
3காற்று வாங்குவதற்காகக் கால்வாய் போன்று எறும்புகள் தயாரித்துள்ள இடைவெளிகளில் 10 டன் வெள்ளை சிமிண்டை முதலில் நிபுணர்கள் கொட்டினார்கள். இதனால் அக்கால்வாய்கள் வலுவாகவும் உறுதியாகவும் மாறக்கூடும். பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 8 மீட்டர் ஆழத்தில் 46.5 ச.மீட்டர் பரப்பை நிரப்புவதற்காக சிமிண்ட் கொட்டும் பணிக்கே 10 நாட்கள் பிடித்தது.
 ஒரு மாதத்திற்குப்பின், பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் பணியைத் தொடங்கியது. அப்போதுதான் எறும்புகளின் இந்தப் பிரமாண்டமான நகரத்தைக் கண்டுபிடித்து, சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அற்புதம் இது என்று வர்ணித்தனர்.
எறும்பின் ஆற்றல்
2கட்டமைப்புகளை உருவாக்குவதில் வியத்தகு ஆற்றல் பெற்றது எறும்புக் கூட்டம். ஒவ்வோர் எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் உண்டு. அதைத் தூக்கிக்கொண்டு பல பத்து கி.மீ. தூரம் நடக்கவும் அதற்கு முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தது.
இந்த அடிப்படையில்தான், இந்தச் சுரங்கத்தைக் கட்ட சுமார் 40 டன் மண்ணை ஒரு பெரிய எறும்புக் கூட்டம் தோண்டி எடுத்துள்ளது. இதன்மூலம் எறும்புகள் புதிய காற்றைச் சுவாசிக்கவும் சுருக்க வழியில் பயணிக்கவும் வழி பிறந்தது.
5இந்த எறும்பு நகரத்தில், அறைகளை இணைக்கும் முதன்மைச் சாலைகள் உண்டு. புற்றுகளுக்குச் செல்லும் குறுக்குச் சாலைகளும் உண்டு. அங்கு சிறு தானியங்களையும் சேமித்த உணவுகளையும் எறும்புகள் பாதுகாக்கின்றன. அவ்வாறே, எறும்புகள் கொண்டுவந்து சேர்த்த பச்சைப் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் உண்டு. இவை எறும்புகளின் முட்டைப் புழுக்களை (Larva) காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
 இப்போது சொல்லுங்கள்! அந்த வசனத்தில் எறும்பு ஓடை, அல்லது பள்ளத்தாக்கு (வாதிந் நம்ல்) என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம்! எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! எத்துணை பெரும் உண்மை! சுப்ஹானல்லாஹு!
கான்  பாகவி

இந்தியாவின் சிறப்புகள்

மவ்லவி ஹனீப் ஜமாலி

وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ ( 2:36
(ஆகவே) நாம், 'நீங்கள் (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்¢ உங்கிளில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்கு பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதாரமும் உண்டு' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:36) 

عن ابن عباس رضى الله عنه: ان اول ما اهبط آدم (عليه السلام) الى ارض الهند. (مستدك حاكم)

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) முதலாவதாக இந்திய பூமியில்தான் இறங்கினார்கள்.' (நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்) 

இந்தியாவில் இறங்கிய ஆதம் (அலை)
ونزل آدم (عليه السلام) على جبل من جبال الهند. (الهداية الى بلوغ النهاية) اهبط آدم (عليه السلام) بالهند وحواء (عليها السلام) بجدة. (ابن عساكر) لما نزل آدم (عليه السلام) بسرنديب من الهند. (تفسير بحر المحيط) 
'ஆதம் (அலை) அவர்கள் இந்திய மலைகளில் ஒரு மலையின் மீது (சுவர்க்த்திலிருந்து முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: அல்ஹிதாயா இலா புலூகின் நிஹாயா) 'அதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும்¢ ஹவ்வா (அலை) அவர்கள் ஜிந்தாவிலும் (முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: இப்னு அஸாகிர்) 'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவின் 'ஸரன்தீப்' என்ற பகுதியில் இறங்கினார்கள்.' (நூல்: தஃப்ஸீர் பஹ்ருல் முஹீத்) உலக ஆரம்பத்தில் நாடுகள் கிடையாது. எனவே ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பகுதி இந்தியாவாகும். இந்தியவிலிருந்து இலங்கையை தனி நாடாக பிறிக்கப்பட்ட பிறகு இன்று அப்பகுதி இலங்கை நாட்டிற்க்குள் சென்றுவிட்டது. 

இந்தியாவின் நறுமணம்
عن على رضى الله عنه: اطيب ريح الارض الهندஇ اهبط بها آدم (عليه السلام) فعلق ريحها من شجر الجنة. (تفسير در المنثور)
 அலி (ரளி) அவர்கள் அறவிக்கிறார்கள்: 'இந்தயாவின் (தவ்ஹீது) நறுமணத்தை நான் நுகர்கிறேன். அந்த நறுமணத்தை சுவர்க்க மரத்திலிருந்து ஆதம் அலை அவர்கள் கொண்டுவந்தார்கள்.' (நுல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர்) 

இந்தியாவில் ஈமான் பரவல்
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنْصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنْذِرِينَ (46:29)
'மேலும், (நபியே!) இந்தக் குர்ஆனைச் செவியேற்பதற்காக, ஜின்களிலிருந்து ஒரு சிலரை உம்மிடம் நாம் திருப்பியதை (நீர் நினைவு கூர்வீராக!) அவர்கள் அங்கு வருகை தந்து (சிலர் சிலரை நோக்கி, அமைதியாயிருங்கள் என்று கூறினர். பின்னர், அது (ஓதி) முடிக்கப்பட்ட போது, தங்கள் கூட்டத்தாரிடம் அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகத் திரும்பிச் சென்றனர்.' (அல்குர்ஆன் 46:29

இந்தியர் ஸவாத் பின் காரப் (ரளி) இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி
عن البراء رضي الله عنه قال: بينما عمر بن الخطاب يخطب الناس على منبر رسول الله صلى الله عليه وسلم، إذ قال: أيها الناس، أفيكم سواد بن قارب؟ قال: فلم يجبه أحد تلك السنة، فلما كانت السنة المقبلة قال: أيها الناس، أفيكم سواد بن قارب؟ قال: فقلت: يا أمير المؤمنين، وما سواد بن قارب؟ قال: فقال له عمر: إن سواد بن قارب كان بَدءُ إسلامه شيئا عجيبا، قال: فبينا نحن كذلك إذ طلع سواد بن قارب، قال: فقال له عمر: يا سواد حدثنا ببدء إسلامك، كيف كان؟ قال سواد: فإني كنت نازلا بالهند، وكان لي رَئِيّ من الجن، قال: فبينا أنا ذات ليلة نائم، إذ جاءني في منامي ذلك. قال: قم فافهم واعقل إن كنت تعقل، ... وقال: يا سواد بن قارب، إن الله بعث نبيًا فانهض إليه تهتد وترشد.... قال: فلما سمعته تكرر ليلة بعد ليلة، وقع في قلبي حب الإسلام من أمر رسول الله صلى الله عليه وسلم ما شاء الله، قال: فانطلقت إلى رحلي فشددته على راحلتي، فما حللت عليه نسعة ولا عقدت أخرى حتى أتيت رسول الله صلى الله عليه وسلم، فإذا هو بالمدينة -يعني مكة-والناس عليه كعرف الفرس، فلما رآني النبي صلى الله عليه وسلم قال: 'مرحبا بك يا سواد بن قارب، قد علمنا ما جاء بك'. قال: فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه، وقال لي: 'أفلحت يا سواد': فقال له عمر: هل يأتيك رئيك الآن؟ فقال: منذ قرأت القرآن لم يأتني، ونعم العوض كتاب الله من الجن  (دلائل النبوة للبيهقي 1:248)

பர்ரா (ரளி) அவர்கள் அறவிக்கிறார்கள்: 'உமர் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மிம்பரில் (குத்பா) பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார்கள். (அந்த குத்பாவில்) மனிதர்களே! உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். (அந்த ஆண்டு முழுவதும்) ஒருவரும் (நான் தான் என்று) கூறவில்லை. அடுத்த ஆண்டும் (குத்பாவில்) மனிதர்களே! உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா? என்று கேட்டார்கள். (அப்போது) பர்ராவாகிய நான் அமீரல் முஃமினீன் அவர்களே! யார் அந்த ஸவாத் பின் காரப்? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'ஸவாத் பின் காரப்' என்பவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி மிக ஆச்சரியமானதாகும் எனக்கூறினார்கள். அந்த நேரத்தில் 'ஸவாத் பின் காரப்' (ரளி) அவர்கள் நான் அவர் என முன்வந்தார்கள். அப்போது உமர் (ரளி) அவர்கள் ஸவாத் அவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததைப் பற்றி கூறுங்களேன் என்றார்கள், அதற்கு ஸவாத் அவர்கள் கூறளானார்கள். 'நான் இந்தியாவைச் சார்ந்தவர். எனக்கு யோசனை சொல்லக்கூடிய ஒரு ஜின், பல இரவுகள் என் கனவில் தோன்றி ஸவாதே! அல்லாஹ் ஒரு நபியை அனுப்பியிறுக்கிறான்.  சென்று அவரைச் சந்தித்து ஹிதாயத்தைப் பெற்று நேர்வழி அடைவீராக என்று எடுத்துக்கூறிக்கொண்டே இருந்தது. அதனால் என் உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது பிறியம் ஏற்பட்டுவிட்டது. உடனே மக்கா நோக்கி நான் பயணமானேன். அங்கே சென்றால் மக்கள் நபி (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.' என்னை பார்த்த நபியவர்கள் 'ஸவாதே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்! உம்மை இங்கு யார் கொண்டு வந்தது என்பதை நாம் அறிவோம் என்றார்கள்.' மேலும் ஸவாத் கூறுகிறார். நபியவர்கள் கடவாய்ப் பற்கள் தெறியும் அளவுக்கு (சந்தோஷத்தில்) சிரித்துக்கொண்டே ஸவாதே வெற்றி பெற்றுவிட்டிர் எனக்கூறினார்கள் (அப்போது) உமர் (ரளி) அவர்கள், இப்போதும் அந்த ஜின் (ஸவாதே!) உம்மிடம் வருகிறதா? எனக்கேட்டார்கள். அதற்கு ஸவாத் அவர்கள், நான் குர்ஆன் ஓத ஆரம்பித்த பிறகு அது வருவதில்லை¢ அல்லாஹ்வின் வேதம் ஜின்னைவிட்டும் எனக்கு தேவையற்றதாக்கிவிட்டது எனக்கூறினார்கள்.' (நூல்: தாலாயிலுன் நுபுவத் 1:248) 

இந்தியாவின் மருத்துவ ஊது கட்டை
عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ (رواه البخارى – 5692)
உம்மு கைஸ் பின்தி மிஹ்ஸன் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.' (நூல்: புகாரி – 5692) 

நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகை மரமே (ஊது) கோஷ்டம் அல்லது கோட்டம் (ஊழளவரள சுழழவ) என்பது. இம்மரம் இமய மலையின் வடமேற்கு நாடுகளில் பயிராகிறது. இது இரு வகைப்படும். 1. இந்தியக் கோஷ்டம் (செய் கோஷ்டம்). இது கறுப்பாகவும் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கும். 2. கடல் கோஷ்டம் (வெண்கோஷ்டம்). இது வெண்மையானதாக இருக்கும். இதன் குச்சியில் நெருப்பிட்டு வாசனைப் புகை பிடிக்கலாம். இதை ஊறவைத்து அதன் சாற்றைத் தண்ணீர் அல்லது தேனுடன் குடிக்கலாம். இதைத் தேய்த்து பத்துப் போடவும் செய்யலாம். இதைப் பொடியாக்கி அதன் தூளைப் பயன்படுத்தவதும் உண்டு. கோஷ்டத்தால் அநேக மருத்துவப் பலன்கள் உள்ளன. இந்த ஹதீஸில் கோஷ்டத்தில் ஏழு வகை நிவாரணங்கள் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். தொண்டை வலிக்கும், மார்புச் சதை வாதத்தால் ஏற்படும் விலா வலிக்கும் (Pடநரசழனலnயை) கோஷ்டம் நிவாரணியாகும். 

மாதவிடாய் போக்கையும் சிறுநீர் ஓட்டத்தையும் கோஷ்டம் சீராக்கும். குடற்புழுக்களைக் கொல்லும், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் (ஞரயசவயn குநஎநச), தோலைச் சிவக்க வைக்கும் கடுமையான காய்ச்சல் (சுழளந குநஎநச) ஆகியவற்றுக்கும் கோஷ்டம் சிறந்த நிவாரணியாகும். இரப்பையைச் சூடாக்கிச் சீர்படுத்தும், முகப்பரு மற்றும் தேமலைப் போக்கும். (நூல்: ஃபத்ஹுல் பாரி) கோஷ்ட வேரை மென்றாலோ, காய்ச்சி வாய் கொப்பளித்தாலோ, வாய் நாற்றம் அகலும். நீருடன் கலந்து அதை அருந்தினால் நுரையீரல் வலி, விலா வலி, குடற்புண் ஆகியவற்றுக்கு நல்லது. 5 கிராம் அளவு கோஷ்ட வேரைச் சாப்பிட்டால் இரைப்பை அழற்சிக்கு நிவாரணம் கிடைக்கும். (நூல்: உம்ததுல் காரீ)

இந்தியாவிலிருந்து 40 வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற ஆதம் (அலை)
فحج آدم (عليه السلام) من الهند اربعين سنة. (شعب الايمان) 
'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலிருந்து நாற்பது வருடம் (40) ஹஜ் செய்தார்கள்.' (ஷுஃபுல் ஈமான்)

இந்தியாவில் மரணித்த சுலைமான் (அலை) கூட்டத்தார்
عن خيثمة قال: دخل ملك الموت سليمان  فجعل ينظر الى رجل من جلسائه يديم النظر الله فما خرج قال الرجل: من هذا؟ قال هذا ملك الموت. قال: رأيته نيظر الى كانه يريدنى.... فدعا الريح فحمله عليها فالقته فى الهند.... امرت ان اقبضه بالهند وهو عندك. (مصنف ابن ابى شيبة) 
கைஸமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸுலைமான் (அலை) அவர்களின் சபையில் மலக்குள் மவ்த் (இஜ்ராயீல் அலை) அவர்கள் நூழைந்தார்கள். அக்கூட்டத்தாரில் அமர்ந்திருக்கக்குடிய ஒருவரை உற்றுப் பார்த்தார்கள். சபை கலைந்த பிறகு அம்மனிதர் (நபி சுலைமானிடம்) யார் அந்த மனிதர்? என்னையை வேண்டும் என்பதைப்போல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாராரே என்றார். அதற்கு நபியவர்கள் (ஆம்) அவர்தான் மலகுல் மவ்த் (இஜ்ராயீல்) அவார் என்றார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்படியாக காற்றுக்கு உத்தரவு இட்டார்கள். அது அவரை தூக்கிச் சென்று 'இந்தியாவில்' போட்டுவிட்டது. அப்போது அவர் உம் கூட்டத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவரை இந்தியவில் வைத்தே உயிர் வாங்க வேண்டும் என நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக்கூறி (அவர் உயிரை இந்தியாவில் வைத்து வாங்கி)னார். (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)

இந்தியாவில் மதுவை தடை செய்து குரங்கு
عن طاووس: ان رجلا ابتاع خمرا وخلط فيه ماء ثم حمله الى ارض الهند فباعه وجعل الكيس فى السفينة وكان فى السفينة قرد. فاخذ القرد الكيس وصعد على الدقل فجعل يلقى على السفينة درهما وفى البحر درهما حتى على آخره. (مصنف عبد الرزاق)

'தாவூஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதர் மதுவை வாங்கினார். அதில் தண்ணீரைக் கலந்து பிறகு அதை 'இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்றார்'. (வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணப்)பையை (தான் செல்லும்) கப்பலில் வைத்தார். அந்த கப்பலில் ஒரு குரங்கு இருந்தது. அந்த குரங்கு (பணப்)பையை எடுத்துக்கொண்டு அந்த கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து, கப்பலில் பாதி திர்ஹத்தையும் கடலில் பாதி திர்ஹத்தையும் முழுவதையும் கொட்டிவிட்டது.' (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்)

இந்தியாவிற்கு வந்த அலெக்ஸாண்டர்
ذو القرنين: اسكنر بن فيلبس المقدونى اليونانى.... ثم سافر الى الهند وحارب هناك. (تفسير المنير – للزحيلى)
துல்கர்னைன்: இஸ்கன்தர் பின் ஃபீலபஸில் மன்தூனீயில் யூனானீ என்பவர் இந்தயாவிற்கு பயணம் செய்து அங்கே நடந்த போரில் களந்துக்கொண்டாவர் ஆவார். (தஃப்ஸீருல் முனீர் -ஜஹீலி)

கிரேக்கரான மாவீரர் அலெக்ஸாண்டர் (யுடநஒயனெசந ஆயஉநனழn). இவர் கி.மு. 356 ஆண்டு மாசிடோனியா (மக்தூனியா) பெல்லாவில் பிறந்தார். கி.மு. 323 –ல் பாபிலேனில் (பாபில்) இறந்தார். மாசிடோனியாவை ஆட்சி புரிந்த (கி.மு. 336-323) அலெக்ஸாண்டர் இரண்டாம் ஃபிலிப் உடைய புதல்வராவார். தத்துவ அறிஞரான அரிஸ்டாட்டிலின் மாணவர் இவர். எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா (இஸ்கந்தரியா) நகரை உருவாக்கினார். ஃபரோவின் (ஃபிர்அவன்) இரட்டை மணிமுடியைப் பெற்றார் (துல்கர்னைன்). பேரரசராகத் திகழ்நத அலெக்ஸாண்டரின் ஆட்சி, திரேஸிலிருந்து எகிப்துவரையிலும் கிரேஸிலிருந்து சிந்து சமவெளிவரையிலும் விரிவடைந்திருந்தது. இவர் அனத்தோலியா  சிரியா பினீசியா காசா எகிப்து பாக்ட்ரியா மெசொப்பொத்தேமயியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை 'இந்தியாவின் பஞ்சாப்' வரை நீட்டியிருந்தார்.

நபி (ஸல்) அவர்களுக்கு இந்திய மன்னரின் அன்பளிப்பு
 عن ابى سعيد الخدرى رضى الله عنه قال: اهدى ملك الهند الى رسول الله صلى الله عليه وسلم جرة فيها زنجبيل فاطعمه اصحابه قطعة قطعة واطعمنى منها قطعة. (مستدرك حاكم)
அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்களுக்கு 'இந்திய மன்னர்' ஒரு பாத்திரத்தை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். அதில் இஞ்சி (மரபா) இருந்தது. அதை, நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு சின்ன சின்ன துண்டுகளை உன்ன கொடுத்தார்கள். அதில் ஒரு துண்டை எனக்கும் உன்னக் கொடுத்தார்கள்.' (முஸ்தத்ரக் ஹாகிம்)

இந்தியாவிற்கு அத்தரை இறக்குமதி செய்த ஆதம் (அலை)
عن السدى قال: هبط آدم (عليه السلام) بالهندஇ وانزل معه الحجر الاسوردஇ وانزل معه قبضة من ورق الجنةஇ فنثرها بالهندஇ فنبط شجر الطيبஇ فاصل ما يؤتى من الهند من الورق. (اخبار مكة – للفاكهى)
ஸித்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) இந்தியாவில் இறங்கினார்கள். அப்போது, தன்னோடு 'ஹஜருல் அஸ்வது' (கருப்புக் கல்)லையும், சுவர்க்கத்தின் இலைகளில் ஒரு பிடியையும் கொண்டுவந்தார்கள். அந்த இலைகளை இந்தியாவில் தூவினார்கள். அதிலிருந்து (அத்தர்) மணமான மரம் முளைத்தது. எனவே இந்தியாவிலுல்ல மனமான (அத்தரின்) அஸல் (சுவர்க்க) இலையாகும்.' (நூல்: அக்பார் மக்கா - இமாம் ஃபாகிஹி) 

இந்திய மர இலைகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
عن حبيب بن وائل: ان رجلا من المطوعة قال: رأيت ببلاد الهند شجرا لها ورد احمر ففيه ببياض محمد رسول الله. (المجالسة وجواهر العلم)
ஹபீப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'மதூhவைச் சார்ந்த ஒரு மனிதர் இந்தியாவில் சில மரங்களில் சிகப்பு இலைகளில் வெள்ளை நிறத்தில் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற (எழுத்தை) நான் கண்டேன் எனக்கூறினார்.' (மஜாலிஸது வஜவாஹிருல் இல்ம்)

இந்திய மர இலைகளில் லாயிலாஹ இல்லால்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
عن كليب بن وائل: ان رجلا من المطوعة قال: رأيت ببلاد الهند شجرا له ورد احمر ففيه بياض لا اله الا الله محمد رسول الله (المجالسة وجواهر العلم)
குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'மதூhவைச் சார்ந்த ஒரு மனிதர் இந்தியாவில் சில மரங்களில் சிகப்பு இலைகளில் வெள்ளை நிறத்தில் 'லாயிலாஹ் இல்லல்லாஹூ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற (எழுத்தை) நான் கண்டேன் எனக்கூறினார்.' (மஜாலிஸது வஜவாஹிருல் இல்ம்)

அண்ணலார் இந்தியாவின் வாளைப் போன்றவர்கள்
كعب بن زهير : ان الرسول لسيف يستضاء به ۞ مهند من سيوف الله مسلول. (بانت سعاد-52)

கஃப் பின் ஜுஹைர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: 'உறையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் வாட்களுக்கு மத்தியில் - அருமைத் திருத்தூதர் அவர்கள் இருட்டில் ஒளியைப் பாய்ச்சி வழிகாட்டப் பயன்படுத்தப்படும் 'இந்திய திருநாட்டு வாளுக்கு ஒப்பானவர்கள்' ஆவார்கள். (பானத் சுஆத் - 52)

எனவே இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தியத் திருநாட்டில் அல்லாஹ் நம்மை பிறக்கவைத்ததை நினைத்து சந்தோஷம் அடைவதோடு அவனுக்கு நன்றி கூறுவோமாக! யாஅல்லாஹ்! இவ்வளவு சிறப்புகளை உள்ளடிக்கிய எங்கள் தாய் திருநாடான இந்தியாவை மேலும் செளிப்பான அமைதியான வள்ளரசாக மதச்சார்பற்ற மற்றும் புண்ணிய பூமியாக ஆக்கி வைப்பாயாக! ஆமீன்!!..

11 November 2014

உறுப்பினர்களுக்கான நிபந்தனைகள்

Moulavi to moulavi & varasathul anbiya 

உலமா பெருமக்களுக்கு மேலாண்மைக்குழுவின் நிபந்தனை

அஸ்ஸலாமு அலைக்கும் .

1) Moulavi to moulavi & varasathul anbiya வில் ஒருவருக்கொருவர் இல்மை அதிகப்படுத்தும் விதமாகவும், நாமும் நமது சமுதாயமும்
பயனடைய வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே செயல் பட வேண்டும.

2 )இங்கு தேவையில்லாத உரையாடுதல்,நலம் விசாரித்தல் மற்றும் சொந்த விஷயங்களையும் கொண்டு வரக்கூடாது.

3) தனி நபர் விமர்சனமோ,தப்லீக்,தரீக்காவைப்பற்றிய விமர்சனமோ மற்றும் அரசியல் பதிவோ செய்தல் கூடாது

4 )ஒரு நபர் கேள்வி கேட்டால் பதில் வரும் வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் (ஏன் என்றால் பதில் தருபவர் சொந்த வேலையில் இருக்கலாம்(அல்லது)
கிதாபுகளில் தேடிப்பார்க்கும் நேரம் அதிகம் எடுக்கலாம்)என கருத்தில் கொள்ள வேண்டும்.

5) எந்த ஒரு விஷயத்திலும் ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளக்கூடாது.

6 )moulavi to moulavi&varasathul anbiya வை குறை கூறுவதையோ,விமர்சனம் செய்வதையோ விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் ,குறை ஏதேனும் இருப்பின் மேலாண்மைக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்

7 தங்கள் தேவையில்லாத புகைப்படம் மற்றும் உலக விஷயங்களை பதிவு செய்வதை விட குர்ஆன்,ஹதீஸ் இஜ்மா கியாஸ்
மூலம் அதிகமாக
சந்தேகங்கள் கேட்டு பயன் பெறுவது என கவனத்தில் கொள்ள வேண்டும்.

8 )இங்கு தேவையில்லாத விஷயங்களை பதிவு செய்வதோ,தனி நபர் குறிப்பிட்டு இழிவான வார்த்தைகளை விடுவதாக இருந்தால்,மேலாண்மைக்குழு உறுபினர்கள் மென்மையான முறையில் சொல்லுவோம்.அதற்கு மீறி செய்தால் நீக்குவதற்கு முழு உரிமை மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு உண்டு.

9) Moulavi to moulavi&varasathul anbiya விலும் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி&பதிலை பதிவு செய்வதற்கும் முழு உரிமை உண்டு,எனவே பதில் சொல்லும் தருணத்தில் கிதாபு பெயர் மற்றும் ஆதாரத்தை பதிவு செய்திட வேண்டும்

10) தீனை நிலை நாட்ட
தீமையை ஒழித்திட
நன்மையை நாடி மறுமை பயணம் இதோ..
பாடு படுவோம்
பயன் பெறுவோம் ஆமீன்

மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்


1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, தாரமி, பைஹகீ, மிஷ்காத் பாகம் 120 பாபுல் ஜும்ஆ)
2. "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 3089)
3. "நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்)
4. "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268)
இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள். (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94 அத்தஅம்முல் 251)


10 November 2014

உறுப்பினர் படிவம்


சங்கைக் குரிய உலமாப் பெருமக்களே.. தங்களின் தகவல்களை நிரப்பி submit கொடுத்தாலே அது எமக்கு வந்துவிடும்.எமது பதிவேட்டில் பதியப்பட்டுவிடும். இன்ஷா அல்லாஹ்.

ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும்


وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِين  
 நான் நோயுற்றால் அவனே [அல்லாஹ்வே] என்னை குணப்படுத்து வான். [அல்குர்ஆன் :26 ; 80]
இது இறைத்தூதர் கலீலுல்லாஹ் இப்ராஹீம் [அலை]அவர்களின் ஏகத்துவ முகவரியை எடுத்துச் சொல்லும் ஓர் திருமறை வசனம்.

பெரும்பாவங்கள்


1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
…எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)
எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
2. கொலை
~~~~~~~~~~~~
எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)
ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
3. சூனியம்
~~~~~~~~~~
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)
மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
4. தொழுகையை வீணாக்கி விடுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஷதங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)
மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)
கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)
6. நோன்பை விடுதல்
~~~~~~~~~~~~~~~~~
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் (நோற்பது கடமையாகும்).. (2:183,184)
எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
7. ஹஜ்ஜு செய்யாமை
~~~~~~~~~~~~~~~~~~
…..எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்… (3:97)
8. பெற்றோரைத் துன்புறுத்துதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~`
…… (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)
பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)
தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)
9. உறவினர்களை வெறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)
எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)
10. விபச்சாரம்
~~~~~~~~~~~~
(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)
கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
11. ஆண் புணர்ச்சி
~~~~~~~~~~~~~~~
லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)
12. வட்டி
~~~~~~~~~~~
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)
வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)
அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்… (6:152)
அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்… (39:60)
பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
_______________________________________________
….உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)
16. தலைவன் அநீதி செய்தல்
__________________________
எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)
எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
17. பெருமை
நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
18. பொய்ச்சாட்சி கூறல்
______________________
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)
19. மது அருந்துதல்
_________________
எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)
அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)
20. சூது
________
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
__________________________________________
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)
22. மோசடி செய்தல்
___________________
”மோசம்” செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்… (3:161)
23. களவு
___________
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)
24. வழிப்பறி
_____________
ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)
25. பொய்ச் சத்தியம்
___________________
மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்
1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,
2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,
3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
26. அநீதி இழைத்தல்
___________________
அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)
27. கப்பம் பெறல்
_______________
(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)
28. தகாத உணவு
________________
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)
அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)
29. தற்கொலை
_________________
எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)
30. பொய்
__________________
… யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)
மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
31. கெட்ட நீதிபதி
__________________
… எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)
32. அதிகாரியின் இலஞ்சம்
__________________________
இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
_____________________________________
ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)
34. கூட்டிக் கொடுத்தல்
________________________
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
______________________________________
(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)
37. முகஸ்துதி
______________
சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)
38. கற்ற கல்வியை மறைத்தல்
_____________________________
‘அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்’, பாமரமக்களிடம் ‘அறிவாளி’ எனப் பெயர் எடுப்பதற்கும், ‘மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை’ அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
39. சதி செய்தல்
_______________
நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)
சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
__________________________________________
”சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்” சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)
41. விதியைப் பொய்ப்படுத்துதல்
______________________________
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
42. மற்றவர்களின் இரகசியம்
___________________________
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். எங்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு தேவையின் நிமித்தம் (ஒரு இடத்துக்கு) அனுப்பினார்கள். நான் திரும்பி வரும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதையில் ஓரிடத்தில் அமர்ந்து என்னை எதிர்ப்பார்த்தார்கள். நான் என் தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சற்று தாமதித்து விட்டேன். அப்போது அன்னையவர்கள் எங்கு சென்றாய்? என விசாரித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியுள்ளார்கள் எனக் கூறினேன்.
அது என்ன? என என் தாயார் வினவினார்கள்.
உடனே நான் அது இரகசியம். (சொல்ல மாட்டேன்) என்றேன். அப்போது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்; ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரகசியத்தைப் பேணிக் கொள் (சொல்ல வேண்டாம்) எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திரிமிதீ)
43. கோளுரைத்தல்
_________________
இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)
44. திட்டுதல் (சபித்தல்)
____________________
ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)
45. வாக்கு மாறுதல்
___________________
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
____________________________________
எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
47. கணவனுக்கு மாறு செய்தல்
_____________________________
… எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)
48. உருவப் படம் வரைதல்
_________________________
நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
49. ஒப்பாரி வைத்து அழுதல்
__________________________
ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)
50. கொடுமை செய்தல்
_____________________
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)
51. வரம்பு மீறுதல்
_________________
எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்
__________________________________
அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)
53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்
_________________________________
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)
54. துறவிகளைத் துன்புறுத்துதல்
______________________________
எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
55. மமதையும், தற்பெருமையும்
_________________________________
…பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
____________________________________
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)
ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)
57. அடிமை ஒளிந்தோடல்
_________________________
நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)
__________________________________________
அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
_________________________________
தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
60. மேலதிக நீரைத்தடுத்தல்
___________________________
‘மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது’ என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
_________________________________________
நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
_________________________________________
அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
__________________________________________
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
__________________________________________
யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் ”யுத்தப் பிரகடனம்” செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
65. தனித்துத் தொழுதல்
______________________
ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
66. ஜும்ஆவைத் தவற விடல்
________________________________
எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) ”அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்” என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
_________________________________________
…(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். (4:12-14)
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
_______________________________
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
________________________________________
யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
________________________________
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)

09 November 2014

மதுவை ஒழிப்போம் மனிதனை காப்போம்


காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் 'கள்' இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் 'கள்'ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள். இப்போது படித்த மாப்பிள்ளைகள் 'பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் 'பார்ட்டி' என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம். குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.
குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா...? அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா...? வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா...?
படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா...? மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா...? கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு. தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு 'பெக்கோ' இரண்டு 'பெக்கோ' கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.
குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா....? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்! எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.
சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான். ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?
குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.
குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.
பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!
நன்றி : - க. அம்சப்ரியா - தினமணி